Main Menu

தொற்று வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. தொற்று வீதம் 4,7% இல் இருந்து ஒரே நாளில் 5,5% வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 37.218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களின் பின்னர் 7.587.400 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் 3.392 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 763 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தமாக 9.271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1.617 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மண்நேரத்தில் 34 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 118.871 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தடுப்பூசி!

இதுவரை முதலாவது தடுப்பூசியினை 51.843.873 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 50.754.849 பேர் இரண்டாவது தடுப்பூசியினையும், 6.302.353 பேர் தங்களது மூன்றாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். 

பகிரவும்...