Main Menu

தமிழர்களுக்கு நாளைய நாள் இருள் தினமாகும் – சாணக்கியன்

இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் தமிழருக்கு இருள் தினமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் நாளைய தினம் காலை 9  மணிக்கு அனைவரையும் ஒன்றுகூடுமாறும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம் என தெரிவித்துள்ள அவர், எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரையும் வருகை தருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...