Main Menu

தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உறுதியாக இருப்பதை இந்த தேர்தலில் காண முடிந்தது. இதிலிருந்து தமிழகத்தை ஆளும் உரிமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் டிசம்பர் 30ஆம் திகதிக்குள்  நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாநில தேர்தல் ஆணையமும் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...