Main Menu

ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர் ரணில் பதவி விலக வேண்டும் என ஏகமனதாக தீர்மானம்!

ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...