Main Menu

சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை! – ஜனாதிபதி மக்ரோன்

சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இன்று புதன்கிழமை காலை காணொளி மூலம் இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அதன் பின்னரே இதனை அறிவித்துள்ளார். ”சுகாதார சூழ்நிலைகள் எங்களுக்கு பின்னால் இல்லை. இன்னும் பல மாதங்களுக்கு இந்த நிலை தொடரும்!” என தெரிவித்துள்ளார்.  அதேவேளை, Guadeloupe ம்றும் Martinique தீவுகளில் சூழ்நிலை மிக மோசமாக உள்ளதாகவும், அங்கு “அவசரகால சூழ்நிலை” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்ரோன் தெரிவித்தார். 

பகிரவும்...