சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வு – 14 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
செங்கலடி பிரதான வீதியில் உள்ள கட்டடத்தொகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த விடயம் குறித்து தகவலறிந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த இடத்தை சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசார் முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜாவின் தலைமையில் ஏறாவூர் பொலிசாருடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும்