Main Menu

கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் – பசில்!

கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவினைக் கண்டு ஒரு தரப்பினர் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பகிரவும்...