Main Menu

கொவிட்-19: பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 555பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான இரண்டாவது நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிக்கப்பட்ட 16ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மூன்று இலட்சத்து 17 ஆயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 535பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 473பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 87ஆயிரத்து 447பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...