Main Menu

குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகின்றது உலகின் முதல் கொரோனா நாசி தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது கொரோனா நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசி INCOVACC 26ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி, அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களிடம் 800ரூபாய் விலையிலும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...