Main Menu

எரிபொருள் விலை உயர்வு – கம்மன்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு: 8 கட்சிகள் கண்டனம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம்சாட்ட சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

எட்டு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த விடயத்தில் அமைச்சர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொருத்தமான அமைப்பைக் கொண்ட ஒரு திட்டம் எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பகிரவும்...