Main Menu

ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் எடுத்த முடிவு தவறானது – சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இந்த நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஆளும்கட்சி உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்திரி வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால், உதவிகள் தேவைப்படும் மக்களுக்குப் பதிலாக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அதனை மேற்கோளிட்டு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், இதன் காரணமாகவே ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு தான் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

அத்தோடு பிரதான எதிர்க்கட்சிகள் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயம் என்றும் அதேபோன்று ஊழல் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் பிரதமர் இணைந்தமை தவறாகும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...