Main Menu

ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56 ஆயிரத்து 583 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்களில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 22 ஆயிரத்து 723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த ஊரடங்கு சட்டத்தை மீறிய 49 ஆயிரத்து 848 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பகிரவும்...