உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் எட்டு கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட 17இலட்சத்து 57ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து கோடியே 64இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...