Main Menu

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை – அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டரீதியான தடை ஏதும் இல்லை என இன்று சட்டமா அதிபர் தனக்கு அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, பொது மக்கள் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...