Main Menu

இந்தியாவில் 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் உயிரிழப்பு – யுனிசெப்

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்ட சத்து பற்றாக்குறைக்கு இலக்காகிறார்கள். 42 சதவீத குழந்தைகளே போதிய அளவில் உணவை பெறுகிறார்கள். 21 சதவீத அளவிலான குழந்தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறுகின்றனர்.

இந்திய பெண்களின் சுகாதாரத்தில், ஒவ்வொரு 2 ஆவது பெண்ணும் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பரவலாக இரத்த சோகை காணப்படுகிறது. சிறுவர்களை விட சிறுமிகளில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காகவுள்ளது.

5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையுள்ளது. ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு இரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெருமளவிலான பங்கு வகிக்கிறது’ என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பகிரவும்...