Main Menu

இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமானது

இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமானது.

இந்த ரயில் சேவையை இந்திய  பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை இந்திய பிரதமர் மோடி கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைத்தார்.

அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து டில்லி – காஜியாபாத் – மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. நீளப் பாதையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இது டில்லி மற்றும் மீரட்டை இணைக்கும் இந்தியாவின் முதல் முழுமையாக செயல்படும் 82.15 கி.மீ. கொண்ட மெட்ரோ ரயில் பாதையாகும். தில்லி–காஜியாபாத்–மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

மோடி அங்கிருந்து மீரட் தெற்கு மெட்ரோ ரயில் நிலையம் வரை அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் முதல் நமோ பாரத் விரைவு ரயிலானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இது சாஹிபாபாத், காஜியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை டில்லியுடன் இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.