Main Menu

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரிய தீர்மானம் நிறைவேற்றம்!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேரம் இந்த திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனத் தெரிவித்த அவர், சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...