Main Menu

அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!

அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தான் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாம் உடனடியாக குயின்லாந்து சுகாதார துறையினரை தொடர்புகொண்டு தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிவுகள் தாம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாகவும் அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.

நோயால் பாதிக்கப்படும் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என்பதே குயின்ஸ்லாந்தின் கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...