Main Menu

அவ­ச­ர­கால சட்­டத்தை நீடிக்க அனு­ம­திக்கக்கூடாது

உயிர்த்த ஞாயிறு  தினத்­தன்று இடம்­பெற்ற  தொடர்  தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து   நாட்டில்  அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள   அவ­ச­ர­காலச் சட்­டத்தை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்கை  பல­த­ரப்­பி­லி­ருந்தும் எழுந்­தி­ருக்­கின்­றது. குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து குற்­ற­ வா­ளி­களைக்  கைது­செய்­வ­தற்­கா­கவும்  எதிர்­கா­லத்தில் இத்­த­கைய தாக்­கு­தல்­களைத் தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவும் உட­ன­டி­யா­கவே அவ­ச­ர­கால சட்டம் அமு­லுக்குக் கொண்­டு­ வ­ரப்­பட்­டது. 

குண்­டுத்­தாக்­கு­தலில்  250  அப்­பாவி பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 450க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர். தாக்­கு­தல்கள் கார­ண­மாக நாடே அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. பேரி­ழப்­புக்­களைச் சந்­தித்த மக்கள்  அச்­சத்­திலும் பதற்­றத்­திலும்  துவண்­டு­போ­யினர்.  இந்த நிலை­யி­லேயே அவ­ச­ர­கால சட்டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன பிர­க­டனப்படுத்தினார். இந்த  சட்டம் மீது  பாரா­ளு­மன்­றத்தில்  விவாதம் நடத்­தப்­பட்­டது.  அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  அன்­றைய சந்­தர்ப்­பத்தில் எந்­த­வொரு அர­சியல் கட்­சியும்  எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை. இதனால் ஏக­ம­ன­தாக அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம்  அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது. 

அவ­ச­ர­கால சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து  குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுடன்  தொடர்­பு­டை­ய­வர்கள் கைது­செய்­யப்­பட்­ட­துடன்  அதன் பின்­ன­ணியில் செயற்­பட்டோர் குறித்தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.  அத்­துடன்  சந்­தே­கத்தின் பேரில் நூற்­றுக்­க­ணக்­கானோர் இது­வரை  கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இன்­னமும் கைது­களும் தடுத்து வைப்­புக்­களும்  தொடர்ந்து வரு­கின்­றன. நாட்டில் பாது­காப்பு சோதனை நட­வ­டிக்­கை கள் நீடித்து வரு­கின்­றன.  எங்கும் எவ­ரையும் எந்­த­வே­ளை­யிலும் கைது­செய்­வ­தற்­கான அதி­காரம் படைத்­த­ரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­ கின்­றது. 

 இவ்­வாறு படைத்­த­ரப்­பி­ன­ருக்கு அவ­ச­ர­கால சட்­டத்தின் மூலம்   வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் உரிய வகையில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.  சில இடங்­களில்  அவ­ச­ர­கால சட்­டத்தின் மூல­மான அதி­கா­ரங்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன. 

நாட்டில் பொலிஸார் மற்றும் படை­யி­னரின் தேடுதல் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து வரு­கின்­றன. பல இடங்­க­ளிலும் சோத­னைச் ­சா­வ­டிகள் அமைக்­கப்­பட்டு சோத­னைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  வடக்கைப் பொறுத்­த­வ­ரையில், அங்கு கிழக்கு உட்­பட ஏனைய மாகா­ணங்­களை விடவும் பாது­காப்பு நட­வ­டிக்கை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இதனால் பொது­மக்கள்  அசௌ­க­ரி­யங்­களைச் சந்­தித்து வரு­வ­தா­கவும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.  தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் ஈடு­பட்ட  பிர­தான சந்­தே­க­ந­பர்கள்  காத்­தான்­கு­டியை மையப்­ப­டுத்­தியே தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.  

இந்­த­நி­லையில் கிழக்கு மாகா­ணத்தில் கூட இல்­லாத சோதனை கெடு­பி­டிகள் வடக்கில்  வேண்­டு­மென்றே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. கடந்த  24 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­கால சட்­டத்­தை மீண்டும் ஒரு மாதத்­திற்கு  நீடிப்­ப­தற்­கான  பிரே­ரணை  பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு  விவா­திக்­கப்­பட்­டது.  இதன்­போது  உரை­யாற்­றிய  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான  மாவை சேனா­தி­ராஜா, எஸ். சிறி­தரன் உட்­பட பலரும்  அவ­ச­ர­கால  சட்­டத்­தினால்   வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும்  சோதனை கெடு­பி­டிகள் தொடர்பில்  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். 

 இங்கு உரை­யாற்­றிய தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  மாவை சேனா­தி­ராஜா,

“அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் வடக்கில் நடக்கும் மோச­மான சோதனை செயற்­பா­டு­களை ஒரு­போதும்  ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  தென்­னி­லங்­கை­யை­வி­டவும் வடக்கில் இவ்­வாறு மோச­மான சோத­னைகள் இடம் ­பெ­று­கின்­ற­மைக்­கான  காரணம்   என்ன”  என்று சபையில்  கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். 

அவ­ச­ர­கால சட்­டத்தை மீண்டும் ஒரு மாதம் நீடிக்கும் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பை இலங்­கையில் அழித்­தொ­ழிக்க முன்­னெ­டுக்கும்  வேலைத்­திட்­டத்­திற்­காக இந்த சட்டம்   கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக    ஜனா­தி­பதி  கூறி­யி­ருந்தார்.   முன்பு வேண்­டா­மென கைவி­டப்­பட்ட   விதிகள் கூட  இப்­போது மீண்டும் அவ­ச­ர­கால சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.  அவ­ச­ர­கால சட்­டத்தை  கொண்­டு­வ­ரு­வது என்றால் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­களை அழைத்து ஜனா­தி­பதி பேசி­யி­ருக்­க­வேண்டும்.  அவ­ச­ர­கால சட்­டத்­தினால் தமிழ்ப் பிர­தே­சங்கள்  மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. தென்­னி­லங்­கையில் மேற்­கொள்­ளாத சோதனை நட­வ­டிக்­கைகள் வடக்கில் இடம்­பெ­று­கின்­றன.  எமது மாண­வர்கள் பாட­சா­லை­களில், பேருந்­து­களில் சோதனையிடப்­ப­டு ­வ­துடன் இன்னும் பல சோத­னை­களும் இடம்­பெ­று­கின்­றன. எனவே  அவ­ச­ர­கால சட்­டத்தை  நீடிக்க இனியும் அனு­ம­திக்க முடி­யாது என்றும்  மாவை சேனா­தி­ராஜா எம்.பி. சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

இதே­போன்றே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ். சிறி­தரன், கோடீஸ்­வரன் உட்­பட பலரும் இவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர்.  அன்­றைய தினம்   அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு எதி­ரா­கவும்  தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு   வாக்­க­ளித்­தி­ருந்­தது.  கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்பை கோரி­ய­தை­ய­டுத்து  சபையில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்ட நீடிப்­புக்கு ஆத­ர­வாக 22 வாக்­கு­களும்  எதி­ராக 8 வாக்­கு­களும்  அளிக்­கப்­பட்­டன. 

உண்­மை­யி­லேயே அவ­ச­ர­கால சட்­டத்­தினால் திட்­ட­மிட்­ட­வ­கையில் தமிழ் மக்கள்   பாதிக்­கப்­ப­டு­வார்­க­ளே­யானால்  அதற்கு  அனு­ம­திக்க முடி­யாது. இந்த விட­யத்தில் கூட்­ட­மைப்­பி­னரின் செயற்­பாடு சரி­யா­ன­தா­கவே  அமைந்­தி­ருக்­கின்­றது. ஆனாலும் நாட்டின்  பாது­காப்பு தொடர்­பிலும்  தற்­போது  அக்­கறை செலுத்­த­வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது.  சர்­வ­தேச  பயங்­க­ர­வா­தி­க­ளான ஐ. எஸ். அமைப்­பி­னரின்    தாக்­கு­தலை அடுத்து  நாடு  பெரும் பதற்­றத்­திற்குள்   சிக்­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில்  இத்­த­கைய தாக்­கு­தல்­களைத் தடுக்கும் வகை­யிலும் பயங்­க­ர­வா­தி­களி ஊடு­ரு­வலை முற்­றாக ஒழிக்கும் வகை­யிலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வேண்­டி­யுள்­ளன. இந்த நிலையில்  பொலி­ஸா­ருக்கும் பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது  இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.  இத­னால்தான்   கடந்த மாதம்  24 ஆம்­தி­கதி   அவ­ச­ர­கால சட்டம்   நாட்டில் உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்ட வேளை, அதற்கு சபையில் ஏக­ம­ன­தான அங்­கீ­ காரம்  வழங்­கப்­பட்­டது.  

ஆனாலும் வடக்கை மையப்­ப­டுத்தி பாது­காப்பு கெடு­பி­டிகள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­மையின் கார­ண­மா­கவே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இந்தச் சட்­டத்தை  எதிர்க்­க­வேண்­டிய சூழல்  ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த  மூன்று தசாப்­த­கா­ல­மாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டமும் அவ­ச­ர­கால சட்­டமும்   நாட்டில் நீடித்­து­வந்­தன. யுத்தம் இடம்­பெற்­ற­போது, அவ­ச­ர­கால சட்­டத்­தினால்  தமிழ் மக்கள் பெரும் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.  சொல்­லொண்ணாத் துன்­பங்­களை அவர்கள் அனு­ப­வித்து வந்­தனர்.  தமி­ழர்கள் அனை­வரும் புலிகள் என்ற கண்­ணோட்­டத்தில் பார்க்­கப்­பட்டு துன்­பு­றுத்­தப்­பட்­டனர். தற்­போது   தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து  முஸ்­லிம்கள் அனை­வரும்  தீவி­ர­வா­திகள் என்ற  கண்­ணோட்­டத்­துடன்  பார்க்கும் நிலைமை  உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.  தாக்­கு­தல்­தா­ரிகள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும் அவர்­க­ளுக்கு உத­வி­னார்கள் என்ற  சந்­தே­கத்தின் பேரிலும்   பல­நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பெரு­ந்தொகையினர்­ அப்­பா­வி­க­ளா­கவும்  உள்­ளனர். 

எனவே அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருக்­கின்­றது என்­ப­தற்­காக  முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும்   பயங்­க­ர­வா­திகள் என்ற கோணத்தில் எவரும் பார்க்­கக்­கூ­டாது. தற்­போ­தைய நிலையில் அவ­ச­ர­கால சட்­டத்தைத்  தொடர்ந்தும் நீடிப்­ப­தற்­கான உத்­தேசம் இல்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார். வெளி­நாட்டு  இரா­ஜ­தந்­தி­ரி­களை நேற்றுமுன்­தினம் ஜனா­தி­பதி மாளி­கையில் சந்­தித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விட­யத்­தினை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து நாட்டின் பாது­காப்பு நிலை­மை­களை கருத்தில் கொண்டு அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது.  பாதுகாப்புத்துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என்று, தான் நம்புவதாக ஜனாதிபதி  இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறியிருக்கின்றார். 

இதேபோன்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கடந்த வாரம் வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை வெளிநாடுகள் நீக்கவேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களிலிருந்து அவசரகால சட்டத்தை மேலும்  நீடிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது புலனாகின்றது.  அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் கோரியுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அவசரகால சட்டத்தை நீக்கிவிட்டு  நிரந்தரமான  புதிய சட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  

எனவே நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன் அவசரகால சட்டத்தை நீக்கி, மீண்டும்  நாட்டில்  சகஜ நிலையை   ஏற்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று  வலியுறுத்த  விரும்புகின்றோம்.

பகிரவும்...