Main Menu

“அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்”

அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்காக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்படும் . அத்துடன் எமது அடுத்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். 

எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி உள்ளது. அது தொடர்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டில் அனைத்து இன, மத மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...