அதிமுக வாக்குகளை யாராலும் ஈர்க்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணி குறித்து கொள்கை அடிப்படையில் தான் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
* அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் அதைப்பற்றி விஜய் விமர்சிக்கவில்லை.
* ஒரு கட்சியின் தலைவராக உள்ள விஜய் அவரது கட்சியின் கருத்தை தான் வெளிப்படுத்தி உள்ளார்.
* விஜய் கூறியது சரியா? தவறா? என நான் எப்படி கூற முடியும்.
* அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.
* விஜயை ஏற்றுக்கொள்வீர்களா.. ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா.. என்ற கற்பனை கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
* கொள்கை நிலையானது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமைப்பது கூட்டணி என்பது அதிமுகவின் நிலைப்பாடு.
* தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
* பாஜகவும் திமுகவும் ரகசிய உறவு என நாங்கள் ஏற்கனவே கூறியதை தான் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட மற்றவர்களும் கூறுகின்றனர்.
* திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தான் கொள்கையே இல்லை.
* அதிமுக வாக்குகளை எந்த சூழ்நிலையிலும் விஜயால் ஈர்க்க முடியாது.
* மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேசுகிறார் விஜய்.
* திமுகவை எதிர்த்து குரல் கொடுக்க அதிமுக மட்டும் இருந்துவந்த நிலையில் தற்போது தவெக உள்ளிட்ட சிலரும் ஆரம்பித்துள்ளனர்.
* அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை பிரிந்து சென்றவர்கள் என இனி சொல்லாதீர்கள் என்று கூறினார்.
பகிரவும்...