Main Menu

அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கனடா செல்லும் நோக்குடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கியூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த 65 பேரும் கேரள மாநிலம் செல்லத்தில் இருந்து ஒரு விசைபடகில் ஏறி தப்பி சென்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. அதேநேரம் அவர்கள் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த முழு தகவல்களையும் கியூ பிரிவு பொலிஸார் சேகரித்து வருவதுடன், இதற்காக இன்டர்போலின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...