யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது .
இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 572 ஆகவும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளாக ஆயிரத்து 373 ஆகவும் பதிவாகியுள்ளன.
இறப்புகளை விட 199 பிறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.