Main Menu

துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்ட துமிந்த திஸாநாயக்க கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.

ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares