தீவிரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூடு; இந்திய இராணுவ வீரர் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (24) பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் மரணடைந்தார்.
அதைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் உதம்பூரில் இந்த மோதல் நடந்துள்ளது.
உதம்பூர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் செயல்பட்டு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...