Main Menu

உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் அறுவர் காயம்

கினிகத்தேன நகரில் உள்ள உணவகம்  ஒன்று இடிந்து விழுந்ததில்  பாடசாலை மாணவர்கள்  6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (18) காலை இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பாடசாலை மாணவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,  மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 கினிகத்ஹேன நகருக்குப் பயிற்சி வகுப்பிற்காக  வந்த மாணவர்கள் உணவு அருந்துவதற்காக சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் அமர்ந்திருந்த  அடித்தளத்தின் தளம் உடைந்து சுமார் 15 அடி சாய்வாகக் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை  காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...
0Shares