இலங்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: ஜனாதிபதிக்கு ஜி.எல். பீரிஸ் அவசர கடிதம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் மூலம்மேலும் படிக்க...
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வைமேலும் படிக்க...
அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கின்மேலும் படிக்க...
சுமந்திரன், இரா.சாணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின்மேலும் படிக்க...
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்துமேலும் படிக்க...
ஈரானுக்கு அனுதாபம் தெரிவித்த மஹிந்த

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கியமேலும் படிக்க...
மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்
மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், பிராந்தியத்திலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது சுமார் 1 மில்லியன் இலங்கைமேலும் படிக்க...
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று(01) விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை யூட்சன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினரை சாவகச்சேரிமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50மேலும் படிக்க...
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை

அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் இதனை தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முற்பட்ட போதுமேலும் படிக்க...
போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ இலங்கையில் தங்கியிருக்கும் போதுமேலும் படிக்க...
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது – இலங்கை எரிபொருள் விநியோக சங்கம்

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோகமேலும் படிக்க...
போர் பதற்றம் – விமான பயணங்கள் தொடர்பான அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போதுமேலும் படிக்க...
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல்மேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகரமேலும் படிக்க...
அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும் – மனோ கணேசன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உள்ளூராட்சி மன்றமேலும் படிக்க...
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்

“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகமேலும் படிக்க...
ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய வரி திருத்தங்கள் அமுல்

இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி இதற்கானமேலும் படிக்க...
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை புகுந்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று,மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- …
- 469
- மேலும் படிக்க
