இலங்கை
பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத்மேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல்மேலும் படிக்க...
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதம் – மஹிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
2026 வரவு-செலவுத் திட்டம்; நிதி, சுகாதாரம், பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 5 வரை 23 நாட்கள் இடம்பெறும். இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம்மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையைமேலும் படிக்க...
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர்மேலும் படிக்க...
13ஆவது அரசியலமைப்பு தொடர்பில் பேசுவதை ஈழத் தமிழர்கள் கைவிட வேண்டும் – அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு கோரிக்கை

இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு, சர்வதேச தமிழர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. ஈழத்திலும் உலகப் புலம்பெயர்ந்தோரிலும் உள்ள அனைத்து தமிழர்களிடமும், இந்த கோரிக்கையை முன்வைப்பதாக, அமெரிக்கத்மேலும் படிக்க...
இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக தடுப்பு மையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போதைப்பொருள்மேலும் படிக்க...
மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும்மேலும் படிக்க...
யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 12ஆம் திகதிமேலும் படிக்க...
ஹெரோயினுடன் பிடிபட்ட அதிபரின் மனைவி, கொஸ்கொட சுஜீயின் உறவினர்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஹெரோயினுடன்மேலும் படிக்க...
சஜித் பிரேமதாச ICWA இந்திய கவுன்சிலில் உரை

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார். இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கமேலும் படிக்க...
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையில் விசேட சந்திப்பு

இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்து அவருடன் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்டமேலும் படிக்க...
கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறுகையில், சமீபத்திய தகவல்கள் கவலையளிக்கும்மேலும் படிக்க...
பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாராளு-மன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர்

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குமேலும் படிக்க...
இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 405
- மேலும் படிக்க

