இலங்கை
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்டமேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதியமேலும் படிக்க...
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு : இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில்மேலும் படிக்க...
துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு
அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவர் பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டுக்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கானமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்புமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஆனந்தசங்கரி
தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு தெரிவித்த ஆனந்தசங்கரி ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்மேலும் படிக்க...
எமது மண்ணை நாமே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் வீணாகக்கூடாது ; ஸ்ரீகாந்த்
எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதேமேலும் படிக்க...
பஹல்காம் தாக்குதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்
சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத்மேலும் படிக்க...
வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல் வாதிகள் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்
வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ் சாட்டியுள்ளார். யாழ். வேலணை பகுதியில் நேற்று (02) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்மேலும் படிக்க...
பாராளுமன்றம் மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடுகிறது
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) கூடிய பாராளுமன்றமேலும் படிக்க...
விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் ஒப்படைப்பு
இலங்கை இராணுவம் பல்வேறு விசாரணைகளுக்காக கடந்த காலங்களில் பறிமுதல் செய்து வைத்திருந்த பொருட்களை, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிகளிலும், அவர்களின் உடமைகளாகமேலும் படிக்க...
டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு சினமன் கார்டன்ஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 04 முதல் மேமேலும் படிக்க...
2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு
2025 மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பட பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த மாதத்திற்கான ஏற்றுமதி வருவாய் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.மேலும் படிக்க...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் : பாரபட்சமற்ற விசாரணையை கோரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்மேலும் படிக்க...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- …
- 469
- மேலும் படிக்க
