Main Menu

சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே தாம் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய,குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன,அருட்தந்தை ரோஹன் சில்வா,சட்ட மா அதிபர் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் அவர் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார்.