இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின், சியால்கோட்டில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,
இந்த முறை இந்தியா ஏதேனும் போலித் தாக்குதல் நடத்த முயன்றால், எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நாங்கள் தாக்குதலை கொல்கத்தாவிற்கு எடுத்துச் செல்வோம்.
இந்தியா தனது சொந்த உளவாளிகளையோ அல்லது பாகிஸ்தானிய கைதிகளையோ பயன்படுத்தி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி, அதன் பழியை இஸ்லாமாபாத்தின் மீது சுமத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எனினும், இந்தக் கூற்றை நிரூபிப்பதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், முன்பைப் போலவே இந்த அச்சுறுத்தல்களும் எந்தவித ஆதாரமும் இன்றிய போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியர தரப்பினர் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகமாகவே உள்ளது.
அந்தத் தாக்குதலில், பயங்கரவாதிகளால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம், மே 7 முதல் 10 வரை இரு அண்டைய நாடுளுக்கு இடையே ஒரு குறுகிய, தீவிரமான இராணுவ மோதலைத் தூண்டியிருந்தது.
