ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவான பதிலை வழங்கவில்லை.
அத்துடன், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தங்களது நேரடி நோக்கமல்ல என்றும், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி உள்நாட்டிலேயே வீழ்ச்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரித்துள்ளார்.
