பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கின் முகமது அலா விமானப்படைத் தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமானம் ஒன்று அழிக்கப்பட்டதாகவும், எனினும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், தாக்குதல் நடந்த மூலத்தைக் கண்டறிந்து வருவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்தது.
முன்னதாக, பாக்தாத்தில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈராக்கிய சிறப்புப் படைகளின் போக்குவரத்து விமானத்தை ஏவுகணைகள் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், இந்த ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியாமல் போனதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
