இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்
அமெரிக்க அரசாங்கம் பத்து TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
நன்கொடையாகப் பெறப்பட்ட TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களின் தொகுதி, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றதாக வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் செவ்வாயன்று (17) உறுதிப்படுத்தியது.
இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள், இலங்கை விமானப்படை விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், அதன் செயல்பாட்டுக் குழுவில் பயன்படுத்தவும், பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.
அமெரிக்கக் கடற்படையானது, வணிக ரீதியான பெல் ஜெட் ரேஞ்சர் 206-இன் இராணுவ வடிவமான TH-57 சீ ரேஞ்சர் 1968 முதல் அமெரிக்க கடற்படை மற்றும் பிற அமெரிக்கப் படைகளில் நீண்டகால சேவை வரலாற்றைக் கொண்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புத் தயார்நிலை, மனிதாபிமான உதவி முயற்சிகள் மற்றும் நீண்டகால பிராந்திய நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
