Main Menu

எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது .

இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது .

சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60
மோட்டார் சைக்கிள்கள் : 5
வேன்கள் : 40
மோட்டார் வாகனங்கள் : 15
மோட்டார் லொறிகள்: 200
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் எனவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது .