Main Menu

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் நிறுத்தம்

மின்சாரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொழில் ஆணையாளருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.