எதிர்க்கட்சி கூட்டணியில் இணையாத விமல் வீரவன்ச
2025 நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
முன்னதாக, இந்தப் பேரணியில் பங்கேற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பகிரவும்...