Main Menu

இந்தியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

அதன்படி, பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார்.

ஒக்டோபர் 17 அன்று NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் NDTV உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்தல்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரை ஆற்றவும் உள்ளார்.

பகிரவும்...
0Shares