யாழ். விஜயத்தில் ஜனாதிபதி செம்மணியை பார்வையிடலாம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி பார்வையிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பகிரவும்...