Main Menu

25 பயணிகளுடன் சென்ற பஸ் வீதியில் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

அரலிய உயன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்து வத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வத்தேகம, குடுகல வழியாக கண்டி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்ததாகவும், விபத்து நடந்த நேரத்தில் சுமார் 25 பயணிகள் அதில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பகிரவும்...
0Shares