இந்திய – இலங்கை மீனவர் விவகாரத்தில் இனி பேச்சு வார்த்தைகள் இல்லை – கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை அராஜகமான ஒரு செயலாகவே தாம் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்
இழுவை மீன்பிடி நடவடிக்கை இலங்கையில் மாத்திரம் சட்டவிரோதமானது அல்ல எனவும் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்
இந்தியாவில் உள்ள மீனவர்களும் இந்த மீன்பிடி நடவடிக்கைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் ஒரு சிலரே இழுவை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இழுவை மீன்பிடியில் சாதாரண கூலித் தொழில் செய்யும் மக்களே ஈடுபடுவதாகவும் படகின் உரிமையாளர்கள் இந்திய அரசியல்வாதிகளாகவும் பணபலம் படைத்தவர்களாக உள்ளவர்களுமே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறினார்.
பகிரவும்...