3ம் ஆண்டு நினைவு தினம்- அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார்

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 25ம் திகதி பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று அமரர் திருமதி. காந்திமலர் அம்மாவை நினைவு கூருபவர்கள் அன்புப்பிள்ளைகள் புஸ்பராணி (பேபி சிவா TRT தமிழ் ஒலி நேயர்) தெய்வலதா (வவா) பிரேமலதா (குட்டி) அன்பு மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்பிரமணியம்,யோகராஜா, அன்பு சகோதரர்கள் ஜெயகாந்தன் (யாழ்ப்பாணம்) விஜயகாந்தன் (லண்டன்) சோதிமலர் (யாழ்ப்பாணம்) மைத்துனி ரூபா குமாரி (யாழ்ப்பாணம்) பேரப்பிள்ளைகள் அஷ்வின், அலைக்ஸ், சாகிஷன், சபிஷா, சதுஷா, சாய்கரன், பூட்டப்பிள்ளை கபிரியல் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் அன்னாரை இன்று நினைவு கூருகின்றார்கள்.
அமரர் திருமதி. காந்திமலர் ஜெயக்குமார் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் மருமகன் குடும்பத்தினர்.
அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள் .
பகிரவும்...