Day: December 8, 2024
பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை
ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்திருந்தது. அவர் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர்மேலும் படிக்க...
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற சிரிய ஜனாதிபதி
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸுக்கு நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி, நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் படிக்க...
நெதர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – 5 பேர் உயிரிழப்பு
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றுமாலை 06:15 அளவில் ஹேக் நகரின் தர்வேகாம்ப் பகுதியில் இடம்பெற்ற மூன்று மாடிகள்மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சீனாவுக்கு ஆதரவாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப்பணிப்பாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேகமேலும் படிக்க...

