Day: August 18, 2022
மேர்வின் சில்வா விடுதலை – கொழும்பு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வுமேலும் படிக்க...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். வசந்த முதலிகே உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது, கொழும்புமேலும் படிக்க...
தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்
தமிழ்க் கடல் என்று அழைக்கப்படும் இலக்கிய பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல் நல குறையால் இன்று காலமானார். இலக்கியவாதியாகவும், பேச்சாளராகவும் புகழ்பெற்ற நெல்லைக் கண்ணன், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் காமராஜர் உட்பட பல்வேறு தலைவர்களுடன் பயணித்த இவர்,மேலும் படிக்க...
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டும்-மத்திய வங்கியின் ஆளுநர்
இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் உச்சத்தை எட்டக்கூடும் என்பதோடு அதன் பின்னர் அது குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். மின்கட்டண மாற்றங்களால் படிப்படியான உயர்வு இருக்கும் என்றும், எனினும், முன்னர்மேலும் படிக்க...
தாய்வானுடன் முறையான வர்த்தக பேச்சு வார்த்தைகளைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசியின் சர்ச்சைக்குரிய வருகைக்கு சில வாரங்களுக்குப் பிறகு, தாய்வானுடன் முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை ஆரம்ப இலையுதிர்காலத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்கமேலும் படிக்க...
லண்டன் ரெயில் நிலையத்தில் தீ விபத்து
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. இதையடுத்து தீயைமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் லிஸ் டிரஸ்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள்மேலும் படிக்க...
சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் விருப்பம்
அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மாமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(வியாழக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந் 2007 ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர்மேலும் படிக்க...
போராட்டக் காரர்களிடம் நட்டஈடு கோர தயாராகின்றது அரசாங்கம்!
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை, அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். போராட்டம் இடம்பெற்ற பகுதியினை உரிமை கோரிமேலும் படிக்க...
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும் படிக்க...