Day: March 10, 2022
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையில் சிறிது முன்னேற்றம்: ரஷ்யா தகவல்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகாரோவா கூறுகையில், ‘பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்துமேலும் படிக்க...
தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் யூன் சுக் யோல் வெற்றி
தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பழமைவாத முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல், வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் மக்கள் கட்சியின் யூன் சுக் யோல், 48.59 சதவீதமேலும் படிக்க...
நீட் நுழைவுத் தேர்வு எழுத இனி வயது எல்லை இல்லை
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையைமேலும் படிக்க...
உக்ரைனுக்கு தேவையான மனிதாபிமான உதவி பொருட்களை அனுப்பியது இந்தியா
இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் ருமேனியா சென்றடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழ்.மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவிமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டிற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கைமேலும் படிக்க...
41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (10/03/2022)
தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் , பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும், கண்ணீர் அஞ்சலியும் 10/03/22 வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் ஆத்மசாந்திமேலும் படிக்க...