Main Menu

2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு உறுதியளித்தார்.

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் சீன அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜீஸென்ஹொங் வும் இணைந்துகொண்டதுடன் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா விரும்புவதாகவும் கருத்து தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares