Day: December 6, 2021
தாய்லாந்து- நேபாளத்தில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று அடையாளம்!
தாய்லாந்து மற்றும் நேபாளத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று, கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் என இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த மாறுபாட்டுடன் கண்டறியப்பட்ட நேபாள நாட்டவர் 71 வயதுடையவர்மேலும் படிக்க...
ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம்மேலும் படிக்க...
அரசு பலவீனத்தை மறைக்க அராஜகத்தை கையில் எடுத்துள்ளது – வேலு குமார்
அரசு தனது பலவீனத்தை மறைக்க, நாடாளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வை பகிஸ்கரித்து,இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற முற்றத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போதுமேலும் படிக்க...
கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப் பட்டது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் தனிப்பட்ட காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று இந்த வாரம் இந்தியாவிற்கு செல்லவிருந்தனர். இதன்போது பாரத பிரதமர்மேலும் படிக்க...
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு தமிழ்த் தலைமைகள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும் -இரா.துரை ரெத்தினம்
சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றத் தலைவருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவில் இருபதிற்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் மகாராஷ்டிரால் 7 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்துமேலும் படிக்க...
விளாடிமிர் புதின் இந்தியா வருகை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...