Day: August 24, 2021
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை இன்று தொடக்கம்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்மேலும் படிக்க...
மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி
இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே, அதற்கு அமைச்சரவைமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது 65 ஆவதுமேலும் படிக்க...
ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாகமேலும் படிக்க...
25ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி. கைலாயநாதன் பிறேமா (24/08/2021)
தாயகத்தில் சுழிபுரம் இளவாலையை சேர்ந்த பாரிஸ் 19 இல் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகள் தங்களது 25ம் ஆண்டு திருமண நாளை 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை தங்களது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்கள். இன்று 25ம் ஆண்டு திருமணநாளை கொண்டாடும்மேலும் படிக்க...