Main Menu

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க  சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க வைத்திய பரிசோதனைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஆணையர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...