Main Menu

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஆயிரம் காவலர்கள் வீதம் 39 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றை தவிர, கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் 60,000 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

பகிரவும்...